களனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடமொன்றை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தானை மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா உள்ளிட்ட தரப்பினர் மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.