முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். இன்று காலை 9.30க்கு அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ச்சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.